×

பொன்னமராவதியில் கோயில் கும்பாபிஷேக விழா'

பொன்னமராவதி, டிச. 11: பொன்னமராவதி பட்டமரத்தான் நகரில் புதிதாக கட்டுப்பட்டுள்ள கற்பக விநாயகர், பாலமுருகன், வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு மூன்று நாட்கள் யாக சாலைகள் பூஜைகள் நடத்தப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊர்வலமாக சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு எடுத்துச்சென்று தங்கமுலாம் பூசப்பட்ட கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தினை நடத்தி வழிபட்டனர்.

இதில் அதிமுக மாவட்டச்செயலாளர் வைரமுத்து, தொழிலதிபர்கள் நாச்சியப்பன், மணிகண்டன், மதிமுக மாவட்டச்செயலாளர் செவந்தியப்பன், திமுக ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி, திமுக நகரச்செயலாளர் அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பொன்னமராவதி அருகே நகரபட்டியில் தென்மலை கருப்பர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஊர் அம்பலம் செல்வராஜ் தலைமையில் கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு மூன்று கால யாக பூஜையுடன் நேற்று காலை கடம் புறப்பட்டு கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தினை நடத்தினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், காடன், நாச்சான் மூன்றுகரை பங்காளிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags : Temple Kumbabisheka Festival ,Ponnamaravathi ,
× RELATED கபர்ஸ்தான் நில ஒதுக்கீடு: ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை